Header Ads



UNP யின் செயற்குழு நாளை, யானையா..? அன்னமா...??

பொதுத் தேர்தலில் போட்டியிட பயன்படுத்தும் சின்னம் தொடர்பில் நாளை (19) இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் எம்.பி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தீர்மானத்தை மேற்கொள்ள கட்சியின் செயற்குழு, நாளை கூடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இந்தக் கூட்டம் இடம்பெறும்.

இதன்போது, பொதுத் தேர்தலில் போட்டியிட பயன்படுத்தும் சின்னம் யானையா அல்லது அன்னமா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அகில விராஜ் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.