Header Ads



மரிக்கார் Mp யின் கருத்துக்கு, சாய்ந்தமருதில் கடும் கண்டனம்

சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்­திற்கு நக­ர­சபை உரு­வாக்­கப்­பட்­டி­ருக்கும் விட­யத்தை தனி இராச்­சி­ய­மாக்கும் முயற்சி என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம்.மரிக்கார் கூறி­யி­ருக்கும் கருத்தை சாய்ந்­த­ம­ருது மறு­ம­லர்ச்சி மன்றம் வன்­மை­யாகக் கண்­டித்­துள்­ளது.

இது­கு­றித்து மன்­றத்தின் பொதுச் செய­லாளர் கலீல் எஸ்.முஹம்மட் வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­வது;
“பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரி­வித்­தி­ருக்கும் கருத்­தா­னது சாய்ந்­த­ம­ருது மக்­களின் மூன்று தசாப்­த­கால அபி­லா­ஷை­யையும் சாத்­வீகப் போராட்­டத்­தையும் கொச்­சைப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருக்­கி­றது.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சூத்­தி­ர­தா­ரியின் ஆத்ம சாந்­திக்­கா­கவே தீவி­ர­வா­தியின் பிர­தே­ச­மான சாய்ந்­த­ம­ருத்­துக்கு நக­ர­சபை வழங்கி கௌர­விக்­கப்­பட்­டுள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹிரு­ணிகா பிரே­மச்­சந்­திர இன­வாத நச்­சுக்­க­ருத்தை வெளி­யிட்­டி­ருக்கும் நிலையில், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம்.மரிக்கார் கூறி­யி­ருக்கும் கருத்து எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்­று­வது போன்று அமைந்­தி­ருக்­கி­றது.

உண்­மையில் இன­வா­தி­க­ளினால் முஸ்­லிம்கள் மீது கட்­ட­விழ்த்து விடப்­ப­டு­கின்ற இவ்­வா­றான நச்­சுக்­க­ருத்­துகள் சிங்­கள மக்கள் மத்­தியில் முஸ்­லிம்கள் மீதான தப்­ப­பிப்­ரா­யத்தை இன்னும் அதி­க­ரிக்க வாய்ப்­பேற்­ப­டுத்தும் என்­ப­தனால் எஸ்.எம்.மரிக்கார் போன்றோர் சிங்­கள மக்­க­ளுக்குத் தெளிவை ஏற்­ப­டுத்த வேண்­டிய தார்­மீகப் பொறுப்பை சுமந்­தி­ருக்­கின்­றனர்.

ஆனால் இதனை முற்­றாக மறந்து, சமூக சிந்­தனை என்­பது கிஞ்­சித்தும் இல்­லாத ஒரு­வ­ராக எஸ்.எம்.மரிக்கார், சிங்­கள பேரின சக்­தி­க­ளுக்கு தீனி போடும் வகையில் கருத்­து­ரைத்­தி­ருப்­பது மிகவும் கவ­லைக்கும் கண்­ட­னத்­திற்­கு­மு­ரிய விட­ய­மாகும். தனது சுய­நல, கட்சி அரசியலுக்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய செயற்பாடுகள் முஸ்லிம் சமூகத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மரிக்கார் போன்றோர் உணர முன்வர வேண்டும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.-Vidivelli

சாய்ந்­த­ம­ருது நிருபர்

No comments

Powered by Blogger.