Header Ads



முஸ்லிம்கள் வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் முஸ்லிம்களுடைய விடயங்களை நிறைவேற்றுவதில் மும்முரமாக இருக்கிறோம்

இக்பால் அலி
முஸ்லிம்கள் வாக்களித்தாலும் வாக்களிக்கா விட்டாலும் முஸ்லிம்களுடைய தேவைகளை நிறைவேற்றி வைப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் பொதுச் செயலாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் பொதுச் செயலாளர் அப்துல் சத்தார் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்

சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் பல வருடங்களாக பலரை நம்பி இது சம்மந்தமான நடவடிக்கைகளை சாய்ந்தமருது மக்கள் முன்னெடுத்தார்கள். சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலின் தலைமையிலான நிர்வாகத்துடன் ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கம் வந்தால் நிச்சயமாக உள்ளுராட்சி மன்றத்தைப் பெற்றுத் தருவோம் என்று பகிரங்கமான முறையில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டன

அந்த அடிப்படையில் முஸ்லிம்கள் வாக்களித்தாலும் வாக்களிக்காமல் விட்டாலும் முஸ்லிம் விடயங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணி மிகவும் உன்னிப்பாக அவதானித்து முஸ்லிம்களுடைய தேவைகளை நிறைவேற்றித் தருவதில் நாங்கள் மிகவும் மும்முரமாக இருக்கிறோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் செயலாளர் என்ற வகையில் நான் இந்த அரசாங்கத்துக்கும் விசேடமாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களுக்கும்  நன்றி தெரிவிக்கின்றேன். சாய்ந்தமருது மக்கள் உள்ளுராட்சி சபை தனியாகப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சாய்ந்தமருது மக்கள் அரசியலில் பலரை நம்பி இது சம்மந்தமாக பல விடயங்களை முன்னெடுத்தார்கள். இருந்தாலும் சாய்ந்தமருது சம்மேளனத்தின் தலைவர் உட்பட குழுவினர்களுடன் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில நடத்திய பேச்சு வார்த்தையில் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்தால்  சாய்ந்தமருதுக்கு நகர சபை தருவதாக வாக்குறுதியளித்தார். அதன் அடிப்படையில் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்குவதற்காக வர்த்தமானி அறிவித்தல் தற்போது விடுக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் வாக்களித்தாலும் வாக்களிக்கா விட்டாலும்  ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் பெரமுன இந்த அரசாங்கத்திடம் இருந்து முஸ்லிம்களுடைய தேவைகளை முஸ்லிம்களுடைய விடயங்களை நிறைவேற்றி வைப்பதில் மிகவும் மும்முரமாக இருக்கிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

3 comments:

  1. Ok ஏன் ஒரேயடியா 3 photoes?என்ன வாலியா?

    ReplyDelete
  2. This is a good stand taken by the SLPP, Insha Allah. Brother Abdul Sattar has been with the Rajapaksa family as a loyal and ardent supporter for many years. He knows best the intentions of the Rajapaksa brothers than the Munafique Muzammil who is craving to contest Kurunegala under the SLPP ticket and is going around begging for support from various community leaders. Even if the Muslims DO NOT vote the SLPP/SLFP and their Alliance, Brother Abdul Sattar may be vouching for the truth, Insha Allah. The Muslim Vote Bank in Kurunegal should REJECT Muzammil totally at the next general elections, Insha Allah.
    HE. Gotabaya Rajapaksa's political vision is that young and new political aspirants from the Muslim community should come forward to enter parliament and create a new political culture in the communities of the minorities, who can be honest and bring together the Muslim Vote Bank and gather them to create a "New Muslim Political Culture". A culture that will create a political force which will be honest and sincere and produce "CLEAN"and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise along with the new government with a 2/3 majority, especially from among the Muslim Youth. WITH CANDIDATES LIKE MUZAMMIL, GETTING THE MUSLIM VOTE BANK TO BRING IN THE 2/3 MAJORITY IN PARLIAMENT MAY NOT HAPPEN, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  3. வாலி தான் பிடிக்கிறீர்கள்.கடைக்கித் தான் போகிறீர்கள்.அதனால் தான் எனது முன்னைய comment ஐயும் பிரசுரிக்கவில்லை.இது தான் உங்கள் நடு நிலையான ஊடக தர்மம்.

    ReplyDelete

Powered by Blogger.