Header Ads



இன­ரீ­தி­யான கட்­சிகள் அன்றி, தேசிய ரீதி­யி­லான கட்­சி­களே எமது நாட்­டுக்குத் தேவை­

குறு­கிய கால நோக்­கங்­களை முன் வைத்து எடுக்கும் முடி­வுகள் கார­ண­மாக அழி­வு­களே அதிகம் என முன்னாள் அமைச்சர் இம்­தியாஸ் பாக்கிர் மாக்கர் தெரி­வித்தார்.

கண்டி மல்­வத்தை விகா­ரையில் இடம் பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்­டதன் பின் ஊட­கங்­க­ளுக்கு தெரி­விக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அளுத்­கம கந்தே விகா­ரா­தி­பதி கொங்­கா­விட்ட விம­ல­சார தேரர் பிர­தான சங்­க­நா­யக்கர் பத­விக்குத் தெரிவு செய்­யப்­பட்டு அது தொடார்பான நிய­ம­னக்­க­டிதம் வழங்கும் வைபவம் கண்டி மல்­வத்து விகா­ரையில் இடம்­பெற்­றது. களுத்­துறை மற்றும் பெந்­தோட்டைப் பிர­தே­சங்­க­ளுக்­கான பிர­தான சங்­க­நா­யக்­க­ராக மேற்­படி தேரர் நிய­மிக்­கப்­பட்டார். அதில் கலந்­து­கொண்ட பின்னர் முன்னாள் அமைச்சர் இம்­தியாஸ் பாக்கிர் மாக்கார் மேலும் தெரி­வித்­த­தா­வது,

பாதையில் செல்லும் பிர­தா­னியைக் கண்­டதும் உடனே தலை­யி­லுள்ள துண்டை கழற்றி அவர் காலில் விழுந்து நமஸ்­காரம் பெற்றுக் கொள்ளும் யுகம் தற்­போது மாறி­விட்­டது. இது அடி­மைத்­துவ மனோ பாவம் குறைந்து, ஜன­நா­யகம் மலர்­ந்துள்ள கால­மாகும். அந்த அடிப்­ப­டையில் ஜன­நா­யகத்தை பாது­காக்கும் முயற்­சியில் ஐ.தே.க. ஈடு­படும். நீண்­ட­காலம் ஜ.தே.க. ஜன­நா­யக மர­பு­களைப் பின்­பற்றி வந்­துள்­ளது. ஜக்­கிய தேசியக் கட்­சி­யா­னது ஜன­நா­யகம், பொது உடைமை வாதம், தேசிய ஒற்­றுமை என்ப வற்றின் அடிப்­ப­டையில் இயங்கும் ஒரு கட்­சி­யாகும்.

சகல விட­யங்­க­ளுக்கும் ஜன­நா­யக ரீதியில் தீர்வைப் பெற்றுக் கொள்ளும் இக்­கா­லக்­கட்­டத்தில் நாடு புது­யுகம் நோக்கிச் செல்­கி­றது. ஏனைய கட்­சி­களை விட ஐ.தே.க.வில் ஜன­நாயம் அதி­க­ளவில் காணப்­ப­டு­கி­றது. தனி நபர் தனிக் குழு என்­பதை விட எமக்குத் தேவை முழு சமூ­கத்­துக்­கு­மான பரந்துபட்ட விட­யங்­க­ளாகும். அதுவே எமக்கு முக்­கி­ய­மாகும்.

கட்­சிக்குள் உரு­வாகும் தலை­மைத்­துவப் பிரச்­சி­னை­களை கட்­சியே தீர்த்­துக்­கொள்ளும் அதேநேரம் யாரும் பரசூட் மூலம் குதித்து அதனைக் கைப்­பற்ற முடி­யாது. பெரும்­பா­லான மக்­களும் கட்­சியின் பெரும்­பா­லான அங்­கத்­த­வர்­களும் தெளி­வான ஜன­நா­யகப் பண்­பு­க­ளுடன் உள்­ளனர்.

நாட்டைத் துண்­டாடும் ஒரு முறைக்குப் பதி­லாக நாட்டை வளப்படுத்தும் ஒரு முறை அடுத்த பொதுத் தேர்­த­லில உரு­வாக்­கப்­படும்.

கட்­சியின் பிர­தான அபேட்­ச­க­ராக வரு­ப­வ­ருக்கு ஒரு சில முடி­வு­களை எடுக்கும் தன்மை இருக்க வேண்டும். ஒருவர் பிர­தான வேட்­பா­ள­ராக இருக்க அவரை கட்டுப் படுத்தும் ரிமோட் கொண்ட்­ரோலை வேறு ஒருவர் வைத்­தி­ருப்­பா­ராயின் கட்­சியின் பயணம் வெற்றி அளிக்­காது. கட்­சியின் தலை­வ­ராக உள்­ளவர் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகும் தகுதி இருக்க வேண்டும். அவர் எங்கோ இருந்­து­கொண்டு கண்­ணுக்குப் புலப்­ப­டாத ஒரு கட்டுப் பாட்­டா­ள­ராக இருக்க முடி­யாது.

இன­ரீ­தி­யான கட்­சிகள் அன்றி தேசிய ரீதி­யி­லான கட்­சி­களே எமது நாட்­டுக்குத் தேவை­யா­ன­தாகும். ஆனால் தேசிய கட்சி என்று சொல்லும் சில கட்­சிகள் இன­ரீ­தி­யான சிந்­த­னை­க­ளையே வளர்க்­கின்­றனர். அவ்­வாறு இன ரீதி­யான சிந்­த­னை­களை தோற்­று­வித்த கட்­சிகள் குறு­கிய காலத்தில் வெற்­றி­களை அடைந்­தாலும் தேசிய ரீதியில் அவர்கள் நாட்­டுக்கு அழி­வு­க­ளையே விட்டுச் சென்­றுள்­ளனர். 

அபி­வி­ருத்­தியை அவர்­களால் அடைய முடி­யாது. 1956 ஆம் ஆண்டு 24 மணி நேரத்தில் சிங்­களம் தேசிய மொழி என்ற கோட்­பாடு ஏற்றுக் கொள்­ளப்­பட்­டது. ஆனால் அதே அர­சியல் வாதி­களின் பிள்­ளை­களால் பிற்­பட்ட காலத்தில் சிங்­க­ளமும் தமிழும் தேசிய மொழிகள் என்ற இரு மொழிக் கோட்­பாட்டை நடை­முறைப்படுத்த வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. குறு­கிய கால நோக்­கங்­களை முன் வைத்து எடுக்கும் முடி­வுகள் கார­ண­மாக ஆயி­ரக்­க­ணக்­கான உயிர்­களை இழந்­தது மட்­டு­மல்­லாது பலகோடி சொத்துக்களையும் இழக்க வேண்டி வந்தது. இது பற்றி சிந்தித்தே காலம் கழிந்ததே ஒழிய நாட்டை முன்னேற்ற நேரம் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். -

ஜே.எம்.ஹாபிஸ்

1 comment:

  1. தேசிய ரீதியான கடசிகள் எவை இனரீதியான கடசிகள் எவை என தயவுசெய்து கூற முடியுமா? இக்கட்சிகளை பெயரைக்கொண்டு அடையாளம் காண்பதா அல்லது கட்ச்சிகளின் செயல்பாடுகளைக்கொண்டு அடையாளம் காண்பதா? எந்தப்பெயரில் கடசிகளிருந்தாலும் பிரச்சினையில்லை, கட்சிகள் சிறுபான்மை விரோதப்போக்கு மற்றும் சிறுபான்மையினரின் சமய விரோதப்போக்குடன்தான் கட்சிகளிருக்கக்கூடாது, அதுதான் நாட்டின் ஐக்கியத்துக்கு ஆபத்தானது, அதேபோன்று பெரும்பான்மை விரோதப்போக்கு மற்றும் பௌத்த மதத்தித்ற்கு எதிரான போக்குடன் ஏதாவது சிறுபான்மைக்கட்சிகளிருந்தால் அவற்றைக் கலைத்துவிடுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.