Header Ads



சு.கட்சியின் உடன்படிக்கை தேவையில்லை என்றால் எரித்து போடுங்கள்: வீரகுமார

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கைச்சாத்திட்ட உடன்படிக்கை தேவையில்லை எனில் அதனை கொண்டு வந்து எரித்து போடுமாறு அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியாக செய்ய வேண்டியதை அறிந்துள்ளதாகவும் தேவையானால் அதனை செய்து காட்ட தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்றி எவரும் அரசாங்கத்தை அமைக்க முடியாது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிட்டால், சுமார் 20 ஆசனங்களை கைப்பற்ற முடியும்.

ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தில் வலுவான பலத்தை பெற்றுக்கொடுக்க சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் முயற்சித்து வருகிறது எனவும் வீரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.