சாய்ந்தமருது அடிப்படை உரிமை மனு நிறைவு
சாய்ந்தமருது தொகுதியை பிரதேச சபையாக அறிவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு 2017 ஆம் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
குறித்த பிரதேசம் நகர சபையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள காரணத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு இன்று மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த மொஹமட் அலியார் மற்றும் மொஹமட் நௌபர் ஆகிய இருவரினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
Post a Comment