மைத்திரிபாலவை இணைத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான புதிய கூட்டணியில் இணைத்துக்கொள்வதை பொதுஜன பெரமுனவில் உள்ள பலர் எதிர்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவலை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வெளியிட்டுள்ளார்.
காலியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியாக எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன தீர்மானித்துள்ளன. இது குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஆம், இவரைக் கட்சியில் சேர்ப்பதற்கு முன்பு இந்த நாட்டில் 21/04/2019 அன்று அப்பாவிகளாக கொலை செய்யப்பட்ட 300 மேற்பட்ட மக்களின் கொலைக்கு சரியான நட்டஈடு பெற்றுக் கொடுக்க உடனடியாக நீதிமன்றம் அனுப்பி சிறையில் அடைக்க முயற்சி செய்யுங்கள். இவன் இந்த நாட்டில் களவாடிய அத்தனை சொத்துக்கள், பணத்தைக் கொண்டு நிச்சியம் அந்த நட்டஈட்டை வழங்கலாம்.
ReplyDelete