Header Ads



ராஜபக்ஷவினருடன் டீல் வைத்திருப்போரே, சஜித் தலைமையிலான கூட்டணிக்கு தடை ஏற்படுத்துகின்றனர் - மனுஷ

(எம்.ஆர்.எம்.வஸீம்)

ராஜபக்ஷ்வினருடன் டீல் வைத்துக்கொண்டிருப்பவர்களே சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணியை அமைக்கும் நடவடிக்கைக்கு தடைகளை ஏற்படுத்தி வருவதாக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் புதிய கூட்டணியை அமைத்துக்கொண்டு தேர்தலில் போட்டியிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கின்றோம். 

புதிய கூட்டணியின் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளதுடன் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றார். அதேபோன்று கூட்டணியின் பெயர் மற்றும் சின்னமும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. விரைவில் வெளிப்படுத்துவோம்.

அத்துடன் எமது புதிய கூட்டணியில் இணைந்துகொள்ள விரும்புபவர்கள் அனைவருக்கும் இணைந்துகொள்ளலாம். இதிலிந்து நீங்கிக்கொள்ள யாரும் விரும்பினால் அவர்கள் நீங்கிக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.