Header Ads



முஸ்­லிம்கள் தமது தேவை­களை நிறை­வேற்ற, தாமரைக்கே ஆத­ர­வ­ளிக்க வேண்டும்

‘சாய்ந்­த­ம­ருது மக்கள் தங்­க­ளுக்­கென்று தனி­யான நிர்­வாக அல­கொன்­றினை உரு­வாக்கித் தரு­மாறு கடந்த 4 வரு­டங்­க­ளாகப் போரா­டி­னார்கள்.அப்­போது ஆட்­சி­யி­லி­ருந்த அமைச்­சர்கள் ரவூப் ஹக்­கீமும் ரிஷாட் பதி­யு­தீனும் தொடர்ந்து எம்மை ஏமாற்­றியே வந்­தார்கள். தாமரை மொட்டு பத­விக்கு வந்து குறு­கிய காலத்தில் எமக்கு நகர சபையை வழங்கி எம்மைக் கெள­ர­வித்­துள்­ளது. எல்லாப் புகழும் அல்­லாஹ்­வுக்கே என சாய்ந்­த­ம­ருது பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் வை.எம். ஹனிபா விடிவெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

சாய்ந்­த­ம­ரு­துவை தனி­யான நகர சபை­யாக உரு­வாக்­கு­வ­தற்­காக வெளி­யிடப் பட்­டுள்ள அதி­வி­சேட வர்த்­த­மானி பிர­க­டனம் தொடர்பில் வின­வி­ய­போதே வை.எம். ஹனிபா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

‘சாய்ந்­த­ம­ருது புதிய நக­ர­சபை கட்­ட­டத்­துக்­கான நிதி­யினை விரைவில் ஒதுக்கித் தரு­வ­தாக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார். முஸ்லிம் அர­சியல் கட்­சிகள் முஸ்­லிம்­களின் உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுப்­பவை என அவர்கள் தங்­களை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொண்­டாலும் இது­வ­ரை­காலம் அவர்கள் சாய்ந்­த­ம­ருது மக்­களை ஏமாற்­றியே வந்­துள்­ளார்கள். எங்­களை நாங்­களே ஆளப் போகிறோம். முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும் அர­சியல் கட்­சி­களும் தொடர்ந்து எங்­களை ஏமாற்­றி­னார்கள். ஆனால் பொது­ஜன பெர­முன தாங்கள் பத­விக்கு வந்­ததும் எமது கோரிக்­கையை நிறை­வேற்றித் தரு­வ­தாக வாக்­கு­றுதி அளித்­தி­ருந்­தது. இன்று அந்த வாக்­கு­றுதி நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

இதற்­காக நாங்கள் ஜனா­தி­பதி, பிர­தமர், பஷில் ராஜ­பக் ஷ, முன்னாள் அமைச்சர் அதா­வுல்லாஹ் மற்றும் அமைச்சர் வீர­கு­மார திசா­நா­யக்க ஆகி­யோ­ருக்கு நன்றி கூறக் கட­மைப்­பட்­டுள்ளோம். முஸ்­லிம்கள் தமது உரி­மைகள் தேவை­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்கு தாமரை மொட்டு சின்­னத்­துக்கே ஆத­ர­வ­ளிக்க வேண்டும்.
விரைவில் பாரிய விழா­வொன்­றினை சாய்ந்­த­ம­ரு­துவில் ஏற்­பாடு செய்­ய­வுள்ளோம். சாய்ந்­த­ம­ரு­துக்கு நகர சபை வழங்­கிய ஜனா­தி­பதி, பிரதமர் பஷில் ராஜபக் ஷ, முன்னாள் அமைச்சர்களான அதாவுல்லாஹ் உட்பட அனைரையும் அழைத்து அவர்களுக்கு நன்றி கூறவுள்ளோம் என்றார்.-Vidivelli

ஏ. ஆர்.ஏ. பரீல்

5 comments:

  1. we all will pay for in in near future. wait and see

    ReplyDelete
  2. Yhaaa then only we will have lessons how to cheat mothers, fathers, sisters, brothers, brothers-in-law....
    we will know how to cheat the neighbors.... and How to fight for "Engal Mann..Engal Mann...."
    Ithula vera....... Katha alanthukittu...... Kuduttaar..Kuduppaar..Kudupparellam eduppar avar seitha vinaigalukku.... Allahvidam irunthu saapham nichchayam kedaikkum ungal kullanari putthikki....!!!!
    Aprem eppa neenga Kalmunai Zahiraa va Sa..maruthu...Zahiraava taram uyartta poreenga....athuvum intha palliyil veitthaa illaa?

    ReplyDelete
  3. Ungalukku..Mottu/Thaamaraithaan....ippa dreams... Manathil kurotham vithaitta manitha paavigal... Mattavargal padum kastam ungalukku velangaathu.... Allah mannittan sari ungal nayavanjahattai...

    ReplyDelete
  4. SHAMMELANATHIN THALAIVAR AVARKALEY
    INDA VISHAYATHIL MULUKKA PAADUPATTA
    AL HAJ MILFER CAFOOR AVARKALAI
    MARANDUVITTEERKALEY.
    ITHU MAAPERUM THAVARU.
    IVARAI MARANDA NEENGAL, POTTU SHINNATHTHAI MARANDAALUM, ATHU ORU
    PUTHINAMALLA.

    ReplyDelete
  5. MILFFER CAFOOR ILLAVITTAL
    UNGALUKKU ITHU KIDAITHIRUKKAATHU.
    NANRIKETTAVARKAL.
    MANITHANUKKU NANRI SHELUTHTHAATHAVAN
    ALLAHVUKKU NANRI SHELUTHUVAAN
    ENRU NAMBALAAMAA ????
    ITHEYPOL MOTTUKATCHIKKU NANRI
    SHELUTHUVAARKAL,ENRU NAMBA
    MUDIUMAA ????
    YAAR NANRIKETTAVARKAL.!!!

    ReplyDelete

Powered by Blogger.