தந்தையும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிள், திடீரென தீப்பற்றி எரிந்தது
யாழ்.பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்த நிலையில் வீதியால் சென்றவர்கள் முயற்சியினால் தீ அணைக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
பிறவுன் வீதி- நரிக்குண்டு குளம் பகுதியில் இன்று (22) மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தந்தையும் மகளும் குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.
திருத்தல் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை வாகனத்தில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீதியில் பயணித்தவர்களின் முயற்சியினால் தீ அணைக்கப்பட்டுள்ள நிலையில் தந்தையும் மகளும் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர்.
-யாழ். நிருபர் பிரதீபன்-
Post a Comment