Header Ads



இஸ்ரேலுடன் உறவு, ஈரானுடன் துறவு - கட்டாரை வலியுறுத்திய சவூதி, பேச்சு தோல்வியில் முடிந்தது


கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கட்டாருடான பொருளாதார, ராஜதந்திர தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட சவூதி அறேபியா, 2020 இல் டாவோஸில் நடைபெறவுள்ள பொருளாதார உச்சிமாநட்டிற்கு முன்பதாக கட்டாருடனான உறவுகளை சுமுகமாக்கிக் கொள்ளும் நோக்கில் 2019 டிசம்பரிலிருந்து மேற்கொண்டு வந்த பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்த எந்த முன்னேற்றமும் இன்றி தோல்வியடைந்துள்ளது.

கட்டார் அரசாங்கத்தின் மீது சவூதி அறேபியா அனாவசியமான நிபந்தனைகளை விதித்தமையே பேச்சுவார்த்தைகள் தோல்வியடைவதற்கான காரணம் என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். அதில் ஈரானுடனான உறவை முற்றாகத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்றும் இஸ்ரேலுடனான உறவுகளை சுமுகமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் ரியாத் விதித்த நிபந்தனைகளை கட்டார் நிராகரித்துள்ளது.

சவூதி அறேபியா, பஹ்ரைன், ஐக்கிய அமீரகம் என்பன வொஷிங்டனின் வேண்டுகோளுக்கு இணங்க இஸ்ரேலுடனான அரசியல் ராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை பலப்படுத்தி வரும் அதேவேளை, பிராந்தியத்திலுள்ள ஏனைய அறபு முஸ்லிம் நாடுகள் இதே கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. இதனை மையப்படுத்தியே கட்டாருடனான பேச்சுவார்த்தையில் ரியாத் ஈடுபட்டு வந்தது. ஏற்கனவே, இம்மூன்று நாடுகளும் முன்வைத்த எட்டு அம்சக் கோரிக்கையிலும் இந்நிபந்தனை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

M P

9 comments:

  1. கட்டார் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாம் வரவேற்கின்றோம்.

    ReplyDelete
  2. இதுதான் யஹுதி அரேபியாவின் உண்மை முகம்!
    இவர்களுக்காக வக்காலத்து வாங்கும் மாத கூலி வாங்கும் மதனிகளும் முஸ்லிம்களின் உரிய நோக்கத்தை பற்றி சிந்திக்காமல் திசை திருப்பும் வஹாபிகளும் இதட்கு என்ன சொல்லப்போகிறார்கள் ?

    ReplyDelete
  3. Saudi government is not a Islamic state. Salman acts against Islam, Quran,prophet and teaching of islam and prophet.

    ReplyDelete
  4. 'நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்(கள் மார்க்கத்தைச் சார்ந்தோர்)களைத் தவிர (வேறெவரையும்) உங்களின் அந்தரங்கக் கூட்டாளிகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்;

    ஏனெனில் (பிறர்) உங்களுக்குத் தீமை செய்வதில் சிறிதும் குறைவு செய்ய மாட்டார்கள்;

    நீங்கள் வருந்துவதை அவர்கள் விரும்புவார்கள்;

    அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது;

    அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்;

    நிச்சயமாக நாம் (இது பற்றிய) ஆயத்களைத் தெளிவு படுத்திவிட்டோம்;

    நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்).'

    (அல்குர்ஆன் : 3:118)
    www.tamililquran.com

    ReplyDelete
  5. Riz u are correct mrpeace lanka some movlavi's not all

    ReplyDelete
  6. hink about what is being said, who is saying it and about whom is he saying it, before believing it.

    “O you who believe! If a Faasiq (evil person) comes to you with any news, verify it, lest you should harm people in ignorance, and afterwards you become regretful for what you have done” [al-Hujuraat 49:6]

    The Prophet (Sal Allaahu Alaiyhi wa Sallam) said:

    “Deliberation is from Allaah and haste is from the Shaytaan.” (al-Silsilah al-Saheehah).

    ===============================================================

    We are not trying to purify if a one is wrong.. BUT same time.. it is wrong to critizize whole people of a Muslim land due to a false/true news related to just few people in that society.

    May Allah Protect all Muslims Lands.. And guide us and our rulers toward the Habble of Allah.

    ReplyDelete
  7. இலட்சக்கணக்கான ஏழைகளின் கண்ணீர் துடைக்கிறது கட்டார்.வாழ்க கட்டார்.முதலில் இறைவனுக்கும் பின்னர் கட்டார் அமீருக்கும் நன்றிகள் ஆனந்தக் கண்ணீர் துளிகளால்.

    ReplyDelete

Powered by Blogger.