Header Ads



வெலிகடை சிறைச்சாலையில் சாதாரண திருடர்கள், நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் மிகப் பெரிய திருடர்கள்

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கொள்கை இல்லாத நபர்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இரண்டு தரப்பினரும் ஒன்றாக வாகனங்களை பயன்படுத்துகின்றனர். அழிவான அனைத்து அரங்கேற்றங்களும் நாடாளுமன்றத்தில். தற்போதைய நாடாளுமன்றத்தை விட வெலிகடை சிறைச்சாலை சிறியது.

அங்கு சாதாரண திருடர்கள் இருக்கின்றனர். நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் மிகப் பெரிய திருடர்கள். கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் தற்போதைய அரசாங்கத்திலும் அமைச்சர்கள்.

இவர்கள் அங்குமிங்கும் தாவும் நபர்கள். கொள்கை இல்லாதவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கின்றனர் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. "அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள்,

    அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு

    தொழுகையைக் கடைப்பிடித்து

    ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து

    அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் -

    இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்".

    (அல்குர்ஆன் : 9:18)
    www.tamililquran.com

    பள்ளிவாசல் பரிபாலனம் மட்டுமன்றி இதர பொது விடயங்களில் ஈடுபடும் முஸ்லிம்களுக்கும் இதனை ஓர் அடிப்படைத் தகைமை அளவுகோலாகக் கொள்ளலாம்

    எந்தவொரு வேட்பாளருக்கும் இது பொருந்தும்.

    இனிவரும் காலங்களில் முஸ்லிம்களுள் எவரையும் தெரிவு செய்வதாக இருந்தால், இத்தகுதி கொண்டோரைத் தெரிவு செய்து தம் அமானிதங்களை சரியாக நிறைவேற்றிய திருப்தியை அடைவார்களாக.

    அஃதல்லாவிடின் அவர்கள் புரியும் அநியாயங்களுக்குப் பங்குதாரிகளாகி இறைவனால் தண்டிக்கப்பட நேரிடும்.

    ஹலால் உணவு நெறிப்படுத்துவது போன்று, தகுதியான வேட்பாளர்களும் நெறிப்படுத்தப்பட்டு பொதுமக்கள் ஏமாற்றப்படாது அவர்களது நலன்கள் உறுதிப் படுத்தப்படல் வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.