Header Ads



ரணில் மீது நம்பிக்கையில்லை, தேசியப்பட்டியல் எனக்கு வேண்டாம் - பொன்சேகா

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தமக்கு வாய்ப்பு வழங்கப்படாது போனால் மாற்று நடவடிக்கை குறித்து சிந்திக்கவுள்ளதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் மத்தியில் இன்றைய தினம் -07- உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

நான் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு செல்ல விரும்பவில்லை. போட்டியிட்டே செல்ல விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராக உள்ள நிலையில் வேட்பாளர் நிலை கிடைக்குமா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, பிரேமதாச தமது வேட்பாளர் நிலையை உறுதிப்படுத்துவார் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய முன்னணியின் கீழ் போட்டியிடும் நோக்கத்தை தாம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற் குழுவினரில் தாம் நம்பிக்கை கொள்ளவில்லை என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. அந்த மூதேவி ரணில் ஐதே.கட்சியை அழிக்கின்றான்.

    ReplyDelete

Powered by Blogger.