Header Ads



தாமரைக் கோபுர மீண்டும் திறப்பு நிகழ்வு, கொரோனாவால் தாமதம்

கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு, தாமரை கோபுரத்தின் பொதுத் திறப்பு நிகழ்வானது மேலும் தாமதமடையலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த திட்டத்துடன் இணைக்கப்பட்ட பெரும்பாலான சீன ஊழியர்கள் சீன புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்காக விடுமுறை நிமித்தம் சீனாவுக்கு சென்றிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அவர்கள் இன்னு இலங்கை திரும்பவில்லை.

இதன் காரணமாகவே தாமரை கோபுரத்தின் பொது திறப்பு நிகழ்வானது மேலும் தாமதடையலாம் என இலங்கை தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தாமரைக் கோபுர திட்டம் ஆரம்பமாகி ஏழு வருடங்களுக்குப் பின்னர் 2019 செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வரையறுக்கப்பட்ட வகையில் கோபுரம் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.