கல்முனையில் பெற்றொல் கைகுண்டு வீச்சு
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஸ்லாமாவாத் வீட்டுத்திட்ட குடியிருப்பில் இனந்தெரியாதோரால் பெற்றொல் கைகுண்டு வீச்சு
அதிகாலை 12.45 மணியளவில் இனந்தெரியாதோரினால் வீசப்பட்ட பெற்றோல் கைக்குண்டினால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பாதிப்புக்குள்ளான இடத்தில் தரித்து நீண்ட முச்சக்கர வண்டி அதனுள் நிரப்பியிருந்த வைக்கோல் ஆகியவற்றுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை மாநகர உறுப்பினர் எம்.ஐ.எம். அப்துல் மனாப் பாதிப்புக்குள்ளான இடத்திற்கு சென்று பார்வையிடுவதையும் காணக்கூடியதாக இருந்தது.
Post a Comment