Header Ads



கலீபா உமர் அவர்களின் ஆட்சியை, அமுல்படுத்துவேன் என்ற அரவிந்த் கேஜ்ரிவால்: யார் இவர்..?


டெல்லியில் மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பு ஏற்க இருக்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால். தலைநகரில் இந்த வெற்றியை சாத்தியப்படுத்திய இவர் யார்?
யார் இந்த கேஜ்ரிவால்?
ஹரியாணாவில் ஒரு நடுத்தர பொறியாளரின் குடும்பத்தில் 1968-ஆம் ஆண்டு பிறந்தவர் கேஜ்ரிவால். ஐஐடி காரக்பூரில் இயந்திரவியல் பொறியியல் பட்டம் படித்தவர், டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் 1989-ஆம் ஆண்டு சேர்ந்தார். ஜாம்ஷெட்பூரில் அவருக்கு பணி வழங்கப்பட்டது.
1992-ஆம் ஆண்டு மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு ஆயத்தமாவதற்காக விடுப்பு எடுத்திருந்த பின்னணியில், தமது தனியார் பணியில் இருந்து அவர் விலக நேர்ந்தது. பிறகு கொல்கத்தாவில் சில ஆண்டுகள் வாழ்ந்தபோது அன்னை தெரசா நடத்தி வந்த மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸ், வடகிழக்கு இந்தியாவில் ராமகிருஷ்ணா மடத்தின் சேவை, நேரு யுவ கேந்திரா ஆகியவற்றின் சேவைகளுடன் தன்னை கேஜ்ரிவால் தொடர்புபடுத்திக் கொண்டார்.

1995-ஆம் ஆண்டு மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற அவருக்கு இந்திய வருவாய் பணியில் சேர வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து வருமான வரித்துறையில் உதவி ஆணையராக சேர்ந்த அவருக்கு 2000-ஆம் ஆண்டில் மேல்படிப்புக்காக வெளிநாடு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது, பணியில் மீண்டும் சேர்ந்த பிறகு குறைந்தது 3 ஆண்டுகளுக்காவது பணியில் இருந்து விலகக் கூடாது என அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

அதன்படி 2002-இல் மீண்டும் பணியில் சேர்ந்த அவர், ஓராண்டாக எந்த பொறுப்புக்கும் நியமிக்கப்படாமல் இருந்தார். 18 மாத காத்திருப்புக்கு பிறகு ஊதியமில்லா விடுப்பு கோரி விண்ணப்பித்த அவர், வருமான வரித்துறையின் புது டெல்லி பிரிவு இணை ஆணையராக இருந்த வேளையில், தமது பதவியில் இருந்து 2006-ஆம் ஆண்டு விலகினார்.

முன்னதாக, வருமான வரித்துறையில் இருந்தபோது கேஜ்ரிவாலும், மணிஷ் சிசோடியாவும் சேர்ந்து 1999-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பரிவர்தன் என்ற அமைப்பை நிறுவினார்கள். பிறகு இருவரும் கபீர் என்ற மற்றொரு தத்துவார்த்த சிந்தனை அமைப்பை நிறுவினார்கள். அதன் மூலம் ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை அவர்கள் நடத்தினார்கள்.

இந்த நிலையில், மகராஷ்டிராவை சேர்ந்த அண்ணா ஹசாரேவுடன் கேஜ்ரிவாலுக்கு தொடர்பு ஏற்பட்டது. அப்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பயன்களை, பாதிக்கப்பட்டவர்கள் பெறுவதற்கு ஆதரவாக கேஜ்ரிவால் குரல் கொடுத்தார். பரிவர்தன் அமைப்பு மூலம் ஆற்றிய சேவைக்காக ரமொன் மகசாசே விருது கேஜ்ரிவாலுக்கு கிடைத்தது.
இந்த நிலையில், 2010-ஆம் ஆண்டில் டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுகளுக்கான ஏற்பாடுகளில் ஊழல் நடந்ததாகக் கூறி போராட்டம் நடத்திய கேஜ்ரிவால், அடுத்த ஆண்டே அண்ணா ஹசாரே, கிரண் பேடி உள்ளிட்டோர் முன்னெடுத்த ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்ற அமைப்புடன் சேர்ந்து, ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்.
அண்ணா ஹசாரேவின் மூளையாக அப்போது அறியப்பட்ட கேஜ்ரிவால், பிறகு ஹசாரேவிடம் இருந்து விலகி 2012-ஆம் ஆண்டில் முழு நேர அரசியலுக்குள் நுழைந்தார்.

2 comments:

  1. New Delhi: In an extraordinary acknowledgment of Omar bin Khattab - second Caliph of the Muslims, Delhi Chief Minister Arvind Kejriwal on Saturday said he was deeply impressed by his governance, and will try to emulate him for the betterment of the people.

    "I am extremely impressed by the governance of Caliph Omar and will try to follow his model of governance for the betterment of people" said Kejriwal said while addressing a workshop at India Islamic International Centre.

    Kejriwal's comments was in response to Aateqa Siddiqui, a girl student, who presented a book on the governance of Caliph Omar Farooque.

    Kejriwal said he would study the whole book and try to implement the model of Caliph Omar.

    This is not the first time any Indian leader has found inspiration from the governance of Caliph Omar. Mahatma Gandhi in one of his articles not only praised Caliph Omar but also said India needed a leader like him.

    Writing in ‘Harijan’ (issue dated 27-07-1937), Gandhi advised his fellow Congressmen on leading a life of simplicity in this fashion:

    “I cannot present before you the examples of Sri Ram Chandr and Sri Krishn as they are not personalities recognized by history. I cannot help but present to you names of Abu Bakar (ra) and Umar (ra). They were leaders of a vast empire, yet they lived a life of austerity", Gandhi wrote.

    Omar, also spelled Umar, born 577 CE – died 3 November 644 CE, was one of the most powerful and influential Muslim caliphs (successors) in history.

    He was a senior Sahaba of Prophet Muhammad (pbuh). He succeeded Abu Bakr (632–634) as the second caliph of the Rashidun Caliphate on 23 August 634.

    He was an expert Islamic jurist known for his pious and just nature, which earned him the epithet Al-Farooq ("the one who distinguishes between right and wrong"

    June 14, 2015

    ReplyDelete
  2. தலைப்புக்கும் உமர் (றலி) அவரகளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கினறது.

    ReplyDelete

Powered by Blogger.