ஐ.தே.கட்சியின் தேசிய பட்டியல் எம்.பிக்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும், பின்வரிசை எம்.பிக்கள்
ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தற்போது பதவி வகிக்கும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என அந்த கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில், இவர்களை மீண்டும் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு நியமிக்க வேண்டாம் என அவர்கள் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையிடம் யோசனை முன்வைத்துள்ளனர்.
தற்போது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட வேண்டுமாயின் அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு அதற்கான தகுதியை பெற வேண்டும் என்பது பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடாக இருக்கின்றது.
இதனால், அவர்களுக்கு மாவட்ட வேட்பாளர் பட்டியலில் வேட்புமனுக்களை வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிடம் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவர்களுக்கு தொடர்ந்தும் தேசிய பட்டியலில் நியமனங்களை வழங்குவது அநீதியானது எனவும், புதியவர்களுக்கு இம்முறை தேசிய பட்டியலை ஒதுக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசனை முன்வைத்துள்ளனர்.
Post a Comment