Header Ads



ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டி

 (எஸ்.எம்.எம்.முர்ஷித், எச்.எம்.எம்.பர்ஸான்)

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின்  நாற்பத்தெட்டாவது (48) இல்ல விளையாட்டுப்போட்டி வெள்ளிக்கிழமை (07.02.2020) மாலை கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

கல்லூரியின் முதல்வர் எம்.ஏ.ஹலீம் இஸ்காக் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதுடன், அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி பிரதி கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர்களான வி.ரி.அஜ்மீர், திருமதி எம்.ஜே.எப்.ரிப்கா, ஓட்டமாவடி வலய கல்வி பணிப்பாளர் எம்.ஐ.அஹ்சாப், ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதி தவிசாளர் யூ.எல்.அஹமட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நடைபெற்ற இல்ல விளையாட்டு போட்டிகளில் அரபா இல்லம் (நீலம்) 287 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினையும், ஹிறா இல்லம் (பச்சை) 286 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினையும், சபா (சிவப்பு) 194 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டது.

இதன் போது மாணவர்களது கராத்தே சாகச கண்காட்சி, பேன்ட் குழுவினரின் கண்காட்சி, அணிநடை கண்காட்சி, மைதான நிகழ்ச்சி என்பன இடம் பெற்றதோடு மாணவ படையணியினரினால் அதிதிகள் செங்கம்பலம் விரித்து வரவேற்கப்பட்டனர்.




No comments

Powered by Blogger.