Header Ads



தற்போதைய அரசாங்கத்தின் கீழ், அமெரிக்கா, இந்தியா தமது நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ள முடியும்

ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கத்தின் கீழ், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தமது நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ள முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

ரணில் விக்ரமசிங்க, இந்தியா மற்றும் அமெரிக்கா சார்பான நபராக இருந்தாலும் அவரால் அந்த நாடுகளுக்காக பல வேலைகளை செய்ய முடியாமல் போனது. விருப்பம் இல்லை என்பது இதற்கு காரணம் அல்ல.

ரணிலின் பலவீனமே இதற்கு காரணம். ரணில் எம்.சீ.சீ. உடன்படிக்கை குறித்து 2016ஆம் ஆண்டு பேச்சுவார்த்தை நடத்தினார், எனினும் 2020 ஆம் ஆண்டு வரை அதில் கையெழுத்திட முடியவில்லை.

கையெழுத்திட்டிருந்தால், பொலன்னறுவை தீப்பற்றி எரிந்திருக்கும்.எம்.சீ.சீ. உடன்படிக்கையை விட எக்சா உடன்படிக்கை மிகவும் பயங்கரமானது.

இந்த உடன்படிக்கையால் அமெரிக்க படையினர், இலங்கையின் கடல், வான், தரை என அனைத்து இடங்களையும் பயன்படுத்த முடியும். ஈரானுடன் போர் ஏற்பட்டால், அமெரிக்க படையினர் வருவார்கள்.

எமக்கு பாதிப்பு ஏற்படும். எக்சா உடன்படிக்கையை 2017ஆம் ஆண்டு ரணில் நீடித்தார் என்றாலும் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடக்கவில்லை.

அமெரிக்க, இந்திய திட்டங்களை ரணில் ஊடக அமுல்படுத்த முடியாது. தென் பகுதியில் எதிர்ப்பு கிளம்பாத ராஜபக்சவினர் ஊடாகவே அவற்றை அமுல்படுத்த முடியும்.

காலிமுகத்திடல் அருகில் மூன்று ஏக்கர் நிலத்தை சீன நிறுவனத்திற்கு வழங்கினர். இதனை ரணில் வழங்கியிருந்தால், அந்த மூன்று ஏக்கரை சுற்றி துணியை கட்டியிருப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. இவரது கருத்து முட்டாள்தனது.

    அமெரிக்க-இந்திய செல்வாக்குகள் இலங்கையில் அதிக அளவில் இரூப்பது தான் இலங்கை க்கு நன்மை தரும்

    ReplyDelete
  2. இந்தியாவும் அமெரிக்காவும் தமது நலன்களுக்காகவே செயற்படுவதை கடந்த காலம் எமக்கு( இலங்கையர்களுக்கு) கற்றுத்தந்துள்ளது.தாங்க முடியாத நிபந்தனைகளுடன் கடன் வழங்குதல்,நாட்டைப்பிரித்து தமிழீழம் கொடுத்தல், வளங்களைச் சூறையாடல் ,தரக்குறைவான ஆயதங்களை வழங்கல் என இவ் இரு நாடுகளும் எம்மை பல வழிகளில் சிதைத்துள்ளன.
    ஆனால் அரபு இஸ்லாமிய நாடுகள் மட்டுமே இலங்கைக்கு சாதகமாக தொழிற்படுகின்றன.
    விபச்சார ரீதியாக குறுக்கு வழியில் தமிழீழக் குழந்தையைப் பெற்றெடுக்க நினைக்கும் அஜன்களின் கனவு கானல் நீர் போன்றுதான்.

    ReplyDelete

Powered by Blogger.