Header Ads



சஜித்துடன் சங்கமித்த ஹெல உறுமய, சம்பிக்கவுக்கு உயர் பதவி

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய சக்திக்கு ஆதரவளிப்பதாக ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் ஐக்கிய தேசிய சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் பங்கேற்றிருந்த நிலையில், புதிய அரசியல் கட்சிக்கு சஜித் பிரேமதாச தலைமை தாங்கும் நிலையில் அதற்கு ஆதரவளித்து புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை தோற்றுவிக்க முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய கூட்டணியில் இன்று பாட்டலி சம்பிக்க ரணவக்க அங்கத்துவத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதனடிப்படையில் புதிய கூட்டணியின் உயர் பதவியில் அவர் நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments

Powered by Blogger.