Header Ads



கிணற்றில் விழுந்து சிறுமி உயிரிழப்பு

-செந்தூரன் பிரதீபன்.

அச்சுவேலி வல்லைப் பகுதியில் உள்ள வீடொன்றில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 5 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார் . வீட்டில் இருந்தவர்கள் சிறுமியை தேடி பார்த்தபோது, பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து சடலமாக காணப்பட்டுள்ளார்.

 சிறுமியை மீட்ட உறவினர்கள், அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்தநிலையில், சிறுமியை பரிசோதித்த வைத்தியர் சிறுமி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர் .

இவ்வாறு உயிரிழந்தவர் ஜெகதீஸ்வரன் அட்சயா வயது 5 என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர் .

உயிரிழந்த சிறுமியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது .

மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

ஏற்கெனவே குறித்த சிறுமி கடந்த மழைக்காலத்தின் போது கிணற்றில் விழுந்த நிலையில் உறவினர்களால் மீட்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.