Header Ads



இலங்கையில் முஸ்லிம் தீவிரவாத, செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்கியுள்ளது - மதுமாதவ அரவிந்த

இலங்கையில் முஸ்லிம் தீவிரவாத செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்கியுள்ளதாக பாடகரும் பிவிதுரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவருமான மதுமாதவ அரவிந்த தெரிவித்துள்ளார்.

அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து நாட்டிற்குள் தீவிரவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்ததை தொடர்ந்து நான் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளேன்.

தற்போது இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள சிலர் தீவிரவாத பிரசாரங்கள் பலவற்றை நடத்துகின்றனர்.நாட்டிற்குள் அவ்வாறான பல தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்னும் இருப்பதாக பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மீண்டும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் போன்றதொரு தாக்குதல் இந்த நாட்டில் நடைபெறாமல் இருப்பதற்கும் மீண்டும் இந்த நாட்டிற்குள் தீவிரவாதம் தலைதூக்காமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுமாறு முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்குப் பின்னர் கடந்த வருடம் மே மாதம் 13 ஆம் திகதி மினுவாங்கொடையில் இடம்பெற்ற கலவரத்தின் பின்புலத்தில் மதுமாதவ செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

6 comments:

  1. Jaffna Muslim
    Please don't make these people story big issue.
    Most of your news I have seen either copied from other news agencies
    Or have no proof.
    For the shake of getting news .don't make panic with in people.

    ReplyDelete
  2. විකාර කතා, නැති වී යන්න, නිරයට යන්න. කතා කිරීමට මාතෘකාවක් නොමැති නම්, මෝඩයන් ඔබ මෙම කථාව පමණක් ගනු ඇත. දේශකයන් ඉන්දියාවෙන් පැමිණි බව ඔබ කී පරිදි ඔප්පු කළ හැකිද? ඔබ සියලු දෙනා පාසැල් නොගිය බව ඔබේ ජනතාවගේ මෝඩ කතා වලින් ඔප්පු වේ. ඔයාට කෙලවන්න.

    ReplyDelete
  3. இந்த இனவெறியனின் கருத்தைப் பார்க்கும்போது முஸ்லிம்கள் சிறுபான்மையினருக்கு எதிரான ஏதோ சூழ்ச்சிகளும் இனக்கலவரங்கள் தயாராகின்றன போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. தற்போது எந்தவிதமான அரசியல் செல்வாக்கு, அரசுக்கு முஸ்லிம்களின் கருத்தை முன்வைக்கும் செல்வாக்குள்ளவர்கள் இல்லாத நேரத்தில் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வுடைய பாதுகாப்பு மட்டும்தான் இருக்கின்றது. அது தவிர் அனைத்தும் வெறும் புஷ்வானம் தான். حسبننا الله ونعم الوكيل

    ReplyDelete
  4. Naam solvethellaam...governmentku puriyaathuppa.....ivan solvethuthaan nanraaga puriyum

    ReplyDelete
  5. Ivanum Modi & Amith kitta poi idea ketturuppaaan..!

    ReplyDelete

Powered by Blogger.