தற்போதைய நாடாளுமன்றத்தின், இறுதி அமர்வு இன்று
தற்போதைய நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெறும் அமர்வே இறுதி அமர்வு என, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய தனது டுவிட்டர் வலைதளத்தில் வெளியிட்டுள்ள தகவலில்,
“தற்போதைய நாடாளுமன்றத்திற்கு 41/2 வருடம் பூர்த்தியடைவதற்கு முன்னரான இறுதிக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்காலத்தில் ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், எதிர்காலப் நாடாளுமன்றங்கள், குழுக்கள் மூலம் வெளிக் கொணரப்பட்ட விடயங்களின் தொடர்பில் பக்கச் சார்பின்றி செயற்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment