மோடி, ராகுல்காந்தி உள்ளிட்டோரை சந்தித்து பேசிய மஹிந்த
இந்தியாவுக்கு 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பயணமான பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று (08.02.2020) டெல்லியில் உள்ள ஐதரபாத் இல்லத்தில் இந்திய பிரதமர் நரேந்தி மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
நேற்று டெல்லியை சென்றடைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இந்திய மத்திய அமைச்சர் சஞ்சய் தோத்ரே வரவேற்றுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்து பேசியுள்ளார்.
இந்நிலையில், வாரணாசி, திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு மகிந்த ராஜபக்சே சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment