தம்பலகாமம் மீராம் மக்காம் ஜூம்ஆ பள்ளிவாயலில் சுதந்திர தின வைபவம்
- ஹஸ்பர் ஏ ஹலீம் -
தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீராம் மக்காம் ஜூம் ஆ பள்ளிவாயலிலும் இலங்கை நாட்டின் 72 ஆவது சுதந்திர தின வைபவம் இன்று (04) இடம் பெற்றது.
குறித்த நிகழ்வானது பள்ளிவாயலின் நிருவாக சபையின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இவ் சுதந்திர தின வைபவத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக மரியாதை நிகழ்வும் இடம் பெற்றது.
பள்ளிவாயல் வளாகத்தினுள் இதன் போது கலந்து கொண்ட கல்மெட்டியாவ விகாரையின் விகாராதிபதி விமல ஜோதி ஹிமி தேரர் அவர்கள் மரக் கன்றுகளையும் இதன் போது நட்டு வைத்தார்.
இதில் தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர்களான எச். தாலிப் அலி,ஆர்.எம்.றஜீன் மற்றும் பள்ளிவாயல் நிருவாக சபை உறுப்பினர்கள்,ஊர் பிரமுகர்கள் என பலர் பங்கேற்றார்கள்.
Post a Comment