Header Ads



கோட்டாவின் வெற்றியால் சிறிகொத்தா, மீது இடி விழுந்துள்ளது

ஜனாதிபதி கோட்டாய ராஜபக்‌ஷவின் வெற்றியால் ஐக்கிய தேசியக் கட்சியினை வீட்டுக்கு அனுப்ப முடிந்துள்ளதென தெரிவிக்கும் அமைச்சர் தினேஸ் குணவர்தன அக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்த மீது இடி விழுந்துள்ளதெனவும் சாடினார்.

கேகாலையில் நடைபெற்ற மக்கள் ஐக்கிய முன்னணியின் மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், 

எதிர்வரும் நாள்களில் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு பக்கமலமாக அமையும் வகையிலான  நாடாளுமன்றம் ஒன்று அவசியமெனவும்,  19 ஆவது திருத்ததின் காரணமாக நாட்டு மக்கள் பல இழப்புகளை சந்திக்க நேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.