Header Ads



சிவசேனை தலைவர் சச்சிதானந்தம், உண்ணாவிரத போராட்டம்


வடக்கில் தலையெடுக்கும் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

வலம்புரி பத்திரிகையின் மீது ஊர்காவற்றுறை கத்தோலிக்கர்கள் தாக்குதல் நடத்த முற்பட்டது ஆபத்தானது என குறிப்பிட்டு யாழ் ஆயர் இல்லத்திற்கு முன்பாக சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் இந்தப் போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளார்.

யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் மத வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இங்குள்ள கத்தோலிக்கர்களே மத வன்முறையை தூண்டி வருகின்றனர்.

இதனால் சைவத் தமிழ் மக்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஆகையினால் தொடர்ந்தும் இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாது.

குறிப்பாக கத்தோலிக்கர்களால் மேற்கொள்ளப்படுகின்ற சைவத் தமிழ் மரபுகளை மாற்றுகின்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இதற்கு இங்குள்ள யாழ் ஆயர் இல்லம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோருகின்றோம்.

சைவத் தமிழ் மரபு அழைக்கப்படுவதைக் கண்டித்தும் மத வன்முறைகள் தலைதூக்க இடமளிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் கத்தோலிக்கர்களால் மேற்கொள்ளப்படுகின்ற அச்சுறுத்தும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியும்மே ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

7 comments:

  1. அஜன் என்னப்பா இது? குமார்,அஜன் உங்கலுக்குல் இப்படி ஒரு பிரச்சினையா?

    ReplyDelete
  2. டாக்டரின் அட்வைஸை தல தன் பிரபல்யத்துக்காக மாத்ற்றிப்போட்டுது.

    ReplyDelete
  3. பேய்க்குஞ்சு வெளிக்கிட்டாச்சு!

    ReplyDelete
  4. பேய்க்குஞ்சு வெளிக்கிட்டாச்சு!

    ReplyDelete
  5. Hell dwellers in the world, if you want to see them,
    Just look at them

    ReplyDelete
  6. இந்து தமிழர்களுக்கும் கிறீஸ்தவ தமிழர்களுக்கும் இடையே உள்ள பிரச்சனைகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் . உங்கள் பிரச்சனைகளை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  7. குமாரு,நீரும் அஜனும் அனுஷும் தான் அழையா வீட்டில் நுழைவதும் திறந்த வீட்டில் நாய் நுழைவது போன்றும் இத்தளத்தில் கிறுக்கன் போன்று உளறுவது.
    இப்ப விளங்குதா யார் யார்ர வேலையைப் பார்க்க வேண்டும் என்று.

    ReplyDelete

Powered by Blogger.