Header Ads



மரணிக்கும் வரை ஐ.தே.க. தலைவராக ரணில் இருக்கட்டும்

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்ட நான்கு பேரை மீண்டும் நியமிக்கும் வரை செயற்குழுக் கூட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துக்கொள்ள மாட்டார் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணியின் பிரதிநிதிகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அபேசிங்க இதனைக் கூறியுள்ளார்.

மேலும் அவர்,

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்ட நான்கு பேரை மீண்டும் செயற்குழுவிற்கு நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் தலைவர் பதவி தொடர்பான பிரச்சினைகள் இல்லை. ரணில் விக்ரமசிங்க மரணிக்கும் வரை வாழ்நாள் முழுவதும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை வைத்துக்கொள்ளட்டும் எனவும் அசோக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.