வெட்கம் இருந்தால் மைத்ரி தாமரைமொட்டில் போட்டியிடுவாரா, நிச்சயம் அவரை தோற்கடிப்பேன்
” எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை நிச்சயம்
தோற்கடிப்பேன்” என இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க. நேற்று நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் கூறியதாவது ,
தாமரை மொட்டு கூட்டணியின் தவிசாளராக மைத்ரி நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச விளக்கமளித்துள்ளார்.
சுதந்திரக் கட்சிக்கு 15 லட்ச வாக்குகள் கூட இல்லை.அதுதான் உண்மை.
கூடுதல்பட்சம் இரண்டு லட்சம் வாக்குகள் இருக்கலாம்.சுதந்திரக் கட்சிக்காரர்கள் எல்லோரும் தாமரை மொட்டுக்கு வந்துவிட்டனர் .
வெட்கம் மானம் இருந்தால் மைத்ரிபால சிறிசேன தாமரை மொட்டில் போட்டியிடுவாரா என்பதை நாங்கள் யோசிக்க வேண்டும்.
அவருக்கு பதவி இல்லாமல் இருக்க முடியாது. மக்கள் மீதுள்ள அன்பினால் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அமைச்சுப் பதவிகளை எடுத்துக் கொள்பவர்கள் யார் என்பதனை மக்கள் பார்க்க வேண்டும்.அவர்களை தோற்கடிக்க வேண்டும்.
மீளெழும் பொலனறுவை என்ற திட்டத்தினை அமுல்படுத்தி அதன்மூலம் பெரும் நிதி மோசடி செய்துள்ளார் மைத்ரி.
ஆறாயிரத்து முன்னூறு கோடி ரூபா இங்கு செலவளித்துள்ளதாக கூறும் அவர் அதில் நாலாயிரம் கோடி ரூபாவுக்கு மேல் கொள்ளையடித்துள்ளார் .நான் இதனை பொறுப்புடன் கூறுகிறேன்.இது குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளேன். என்றும் குறிப்பிட்டார் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க, sivarajh
முதலில் இந்த மாதரி ஆளுக்கு சீட்டு கொடுக்க கூடாது
ReplyDelete