Header Ads



பதவியிலிருந்து ஓய்வுபெறத் தயாராக உள்ளேன் - கரு அறிவிப்பு

ஐந்து வருட கால பாவனைக்கு புதிதாக வாகனங்கள் ஏதும் கொள்வனவு செய்யவில்லை. முன்னாள் சபாநாயகர் பாவித்த வாகனத்தையே பாவிக்கின்றேன் என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் நான் சபாநாயகர் பதவியில் இருந்து ஓய்வு பெற தயாராகவே உள்ளேன் எனவும் தெரிவித்தார்.

மல்வத்து அஸ்கிரிய பீட மாநாயக்க தேரர்களை சந்தித்து உரையாடியபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் சபாநாயகராக தெரிவு செய்யப்ட்ட காலத்தில் இருந்து இன்றுவரையில் ஜனநாயகத்தை முன்னிறுத்தியே செயற்பட்டுள்ளேன்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக முன்னெடுத்த போராட்டங்களையிட்டு திருப்தியடைகின்றேகின்றேன்.

நெருக்கடியான காலத்தில் மாநாயக்க தேரர்களின் வழிநடத்தல்களுக்கு அமையவே பிரச்சினைகளை வெற்றி கொண்டுள்ளேன்.

அரசியலுக்கு அப்பாற் சென்று பொது ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு சபாநாயகர் என்ற ரீதியில் ஆற்றியுள்ள வேளை இன்றியமைதாததாக உள்ளது என மாநாயக்க தேரர்கள் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. We salute you Sir, for your dedication,commitment and devotion for the good governance though it did not become reality during my.3 and Ranil period which is nothing but theft and corruption.

    ReplyDelete

Powered by Blogger.