Header Ads



அரசாங்கம் கோழையாக மாறியுள்ளதா, என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்

வர்த்தக சமூகத்திற்கு மத்தியில் அரசாங்கம் கோழையாக மாறியுள்ளதா என மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் பொருட்களின் விலைகள் இன்னும் குறையாததே இதற்கு காரணம் எனவும் ராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதனால் மக்கள் தற்போது கோபத்தில் உள்ளனர். நான் மக்களின் பக்கம் இருக்கின்றேன். தொடர்ந்தும் சந்தைகளை சுதந்திரமாக செயற்பட விட்டு வேடிக்கை பார்க்க முடியாது.

சில வர்த்தகர்கள் இணைந்து அத்தியவசிய பொருட்களின் விலைகளை செயற்கையாக கட்டுப்படுத்தி வருகின்றனர் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. President Election time la kuthumai maavum MCC oppanthamum pola...???

    ReplyDelete

Powered by Blogger.