Header Ads



எம்மைக்காட்டிலும் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் சிறப்பாக விளையாடுகின்றன

அரச நிறுவனங்கள்,  வைத்தியசாலைகள் போன்றவற்றில் திடீர் விஜயங்களை மேற்கொண்டு பரிசோதனை நடத்திவரும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ  ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கும் திடீர் விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய வேண்டும் என 1996 உலகச் சம்பியனான இலங்கை கிரிக்கெட் அணித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

நுகேகொடையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று 6 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுனத்தின் மீது குற்றம் சுமத்தினார். 

அவர் மேலும் கூறுகையில்,

“ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் மோசடிக்காரர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவ்வாறனவர்களே இதனை நிர்வகித்து வருவதால், கிரிக்கெட் சபைக்கும் கிடைக்கும் நிதியை சூறையாடுகின்றனர். ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்திறனிலுள்ள குறைபாட்டினால், நிதி மோசடி, ஊழல் போன்றவை இடம்பெற்று வருகிறது. இவ்வாறனவர்களிடமிருந்து ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தையும், இலங்கை கிரிக்கெட்டையும் பாதுகாக்க வேண்டும்.

நிர்வாகத்திலுள்ள உள்ளவர்கள் தத்தமது கழகங்களில் விளையாடும் வீரர்களை அணிக்குள் கொண்டு வருவதால், திறமையான வீரர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. இதனால்,  இலங்கை கிரிக்கெட் அணியும் அதளபாதாளத்துக்கு வீழ்ந்துள்ளது.

எதிர்வரும் உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிக்கு நாம் தகுதிசுற்றில் விளையாடியே பிரதான சுற்றக்குள் நுழையவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

மேலும், இலங்கை பாடசாலை கிரிக்கெட் அமைப்பிலும் பாரிய தவறு நிலவுகிறது. அதனையும் சரி செய்ய வேண்டும். உதாரணத்துக்கு 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை 10 ஆவது நிலையை அடைந்து.

 எம்மைக்காட்டிலும், கிரிக்கெட் விளையாடிய ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் சிறப்பாக விளையாடி வருகின்றன. ஆகவேஇ எமது எதிர்கால கிரிக்கெட்டின் நிலை எவ்வாறு இருக்கப்போகிறது. 19 வயதுக்குட்பட்ட அணித் தெரிவிலும் நிர்வாகிகள், அதிகாரிகள் ஆகியோருக்கு தேவையான வீரர்களையே உள்ளடக்கியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்டேன்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் பல நல்ல திட்டங்கள் உள்ளன. அவர்  வித்தியாசமான கோணத்தில் செயற்பட்டு வருகிறார். அண்மைய காலங்களில் அரச நிறுவனங்கள், வைத்தியசாலைகள் போன்றவற்றில் திடீர் விஜயங்களை மேற்கொண்டு பரிசோதனை நடத்தியதுடன், பொது மக்களுடனும் உரையாடியிருந்தார்.

இவை வரவேற்றகத்தக்க விடயங்களாகும். அது போல  ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவத்துக்கும் சென்று நிலைமைகளை ஆராயுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.