கட்டாரை தாக்கியது கொரோனா, உறுதிப்படுத்தப்பட்ட நோயாளி
கட்டார் நாட்டில் முதல் கொரோனா வைரஸ் (கோவிட் -19) நோயாளி அடையாளம் காணப் பட்டு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக கத்தார் பொது சுகாதார அமைச்சகம் இன்று அறிவித்தது.
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளியான 36 வயதான கத்தார் நாட்டவர் , சமீபத்தில் ஈரானில் இருந்து திரும்பியவர் என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட நோயாளி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சாதாரண நிலையில் உள்ளதாகவும் அமைச்சின் அறிக்கை தெரிவித்துள்ளது.
Post a Comment