Header Ads



சீனாவை ‘ஆசியாவின் நோய்’ என்று செய்தி வெளியிட்ட 3 ஊடகவியலாளர்கள்

சீனாவை ‘ஆசியாவின் நோய்’ என்று செய்தி வெளியிட்ட மூன்று அமெரிக்க ஊடகவியலாளர்களையும் சீனாவை விட்டு வெளியேறுமாறு சீன அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

“China is the Real Sick Man of Asia” என்ற அந்தத் தலையங்கத்தை சீனாவின் வெளியுறவு அமைச்சகம், ‘நிறவெறி’ தன்மை கொண்டதாகவும் ஒரு குறிப்பிட்ட நாட்டை பாகுபடுத்திப் பிரிப்பதாகவும் குற்றஞ்சாட்டியது.

அத்துடன், அமெரிக்காவில் சீன அரச ஊடகங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளையும் சுட்டிக் காட்டி அமெரிக்காவை சீனா விமர்சித்துள்ளது.

இதேவேளை, குறித்த பத்திரிகை நிறுவனம் அந்த தலையங்கம் தொடர்பாக இதுவரை மன்னிப்புக் கேட்கவில்லை என்று சாடியுள்ள சீன வெளியுறவு அமைச்சகம், குறித்த மூன்று ஊடகவியலாளர்களின் ஊடகவியலாளர் அனுமதி அட்டை இனி செல்லாது என்று அறிவித்துள்ளதுடன் அவர்கள் சீனாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மூவரில், ஜோஷ் சின், சாவோ டெங் ஆகிய இரண்டு ஊடகவியலாளர்களும் அமெரிக்க குடியுரிமை உடையவர்கள் என்பதுடன் மற்றையவர் அவுஸ்ரேலியரான பிலிப் வென் என்பவராவார்.

இவர்கள் மூவரும் 5 நாட்களில் சீனாவிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.