Header Ads



இத்தாலியிலிருந்து வந்த 2 இலங்கையர்கள் வைத்தியசாலையில் அனுமதி

இத்தாலி நாட்டில் இருந்து வந்த இரு இலங்கையர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வருகைதந்த இரு இலங்கையர்களுக்கும் இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக குறித்த இருவரும் அங்கொடை தொற்றுநோய் சிகிச்சை பிரிவில் (IDH) அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இத்தாலியில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் இதுவரை 17 பேர் பலியாகியுள்ளதுடன் சுமார் 655 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.