Header Ads



யாழ் முஸ்லிம் விளையாட்டுக் கழகத்திற்கு 2 வெற்றிக் கேடயங்கள்

 நாடுதழுவிய ரீதியில் பிரதேச செயலகங்களில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவிற்குற்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களிற்கிடையில் அண்மையில் போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றன. 

குறித்த போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய வெற்றியாளர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இன்று (6) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. பிரதேச செயலர் சாம்பசிவம் சுதர்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி)  முரளிதரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண விளையாட்டுத் திணைக்கள பணிப்பாளர் உயர்திரு. குருபரன் மற்றும், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் விஜிதரன் ஆகியோரும், கௌரவ விருந்தினராக யாழ் கிறீன் கிறாஸ் ஹொட்டேல் நிறை வேற்று அதிகாரி அவர்களும் கலந்து கொண்டனர். 

பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் கரம் போட்டியில் 1ஆம் இடத்தினையும், துடுப்பாட்ட்த்தில் 2ஆம் இடத்தினையும் பெற்று இரண்டு வெற்றிக் கேடயங்களை யாழ் முஸ்லிம் விளையாட்டுக் கழகம் பெற்றுக் கொண்டது. 

துடுப்பாட்டத்திற்கான கேடயத்தை  குழுவின் தலைவர் எஸ். அரவிந்தன் அவர்களும், கரம் போட்டிக்கான வெற்றிக் கேடயத்தை குழுவின் இணைத் தலைவர்களான சனூன் மொஹமட் கரீஸ் மற்றும் குசைன் ரியாஸ் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர். 

இந் நிகழ்வில் யாழ் பிரதேச செயலக சிரேஸ்ட உத்தியோகத்தர்கள், அதிகாரிகள், விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள், விளையாட்டு வீரர்கள், பொது மக்கள் பார்வையாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

தகவல் 
என்.எம். அப்துல்லாஹ் 
செயலாளர் 
யாழ் முஸ்லிம் விளையாட்டுக் கழகம் 



No comments

Powered by Blogger.