Header Ads



22.9 மில்லியன் ரூபாய் அதிர்ஷ்ட இலாபச்சீட்டை வென்றவருக்கு விளக்கமறியல்

22.9 மில்லியன் ரூபாய் அதிர்ஷ்ட இலாபச்சீட்டை வெற்றிக்கொண்ட நபரை, போதைப்பொருள் குற்றச்சாட்டில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கண்டி மாநகரை சபையின் ஊழியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த வாரத்தில் குறித்த நபருக்கு 22.9 மில்லியன் ரூபாய் அதிர்ஷ்ட இலாபச்சீட்டு கிடைத்துள்ளது. எனினும் குறித்த நபர் அந்தப் பணத்தைக் கொண்டு 1.6 கிலோகிராம் போதைப்பொருளை வாங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபருக்கு மார்ச் மாதம் 03ஆம் திகதிவரையில் விளக்கமறியிலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.