Header Ads



2025 ஆம் ஆண்டு தனி அரசாங்கத்தினை நிச்சயம் தோற்றுவிப்போம், பொன்சேகா

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட முடியும் என  எதிர்கட்சியினர் குறிப்பிடுவது கழுத்தில் கயிறு  மாட்டிக் கொள்வதற்கு ஒப்பானதாகும் என பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மாபலகம  பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில்  கலந்துக் கொண்டு   கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவுடன்  இணைந்து செயற்படாலம் என்று   ஐக்கிய   தேசிய கட்சியினர் குறிப்பிடுவது   பொருத்தமற்றதாகும். இரு வேறுப்பட்ட கொள்கையினை கொண்டவர்கள்  இணைந்து செயற்பட முடியாது என்பதை கடந்த அரசாங்கத்தில் இருந்து அரசியல் பாடமாக  ஐக்கிய தேசிய கட்சியினர் கற்றுக் கொண்டும் அதனை தற்போது  மறந்து விட்டார்கள்.

கூட்டணியின் ஊடாகவே பொதுதேர்தலில்  வெற்றிப்பெறுவோம். 2025 ஆம் ஆண்டு  தனி அரசாங்கத்தினை நிச்சயம் தோற்றுவிப்போம். அதற்கான  அனைத்து நடவடிக்கைகளும் புதிய   கூட்டணியின் ஊடாக முன்னெடுக்கப்படும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் என்றும் அவர் இதன்போது கூறினார்.

1 comment:

  1. அரசியலுக்கு தான் எந்தத் தகுதியும் இல்லாதவன் என்பதை இந்த நபர் காட்டிக் கொண்டே இன்னமும் அரசியல் பேசுவதைவிட்டு வீட்டுக்குப் போய்விட்டு பொதுமக்களுக்கு கொஞ்சம் நிம்மதியைக் கொடுப்பீராக.

    ReplyDelete

Powered by Blogger.