Header Ads



மலேசியாவுக்கு செல்ல முயன்றபோது படகு கவிழ்ந்ததில் 13 ரோஹிங்யர்கள் வபாத், 40 பேரைக் காணவில்லை.


வங்­காள விரி­குடாக் கடலில் சென் மார்ட்டின் தீவுக்­க­ருகில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை படகு கவிழ்ந்­ததில் குறைந்­தது 13 ரோஹிங்­யர்கள் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார்.

உயி­ரி­ழந்­த­வர்கள் அனை­வரும் முகாம்­களில் வசிக்கும் ரோஹிங்ய சமூ­கத்தை சேர்ந்­த­வர்­க­ளென ஆரம்ப விசா­ர­ணை­களில் எமக்குத் தெரி­ய­வந்­துள்­ள­தென உள்ளூர் நிரு­வாக உத்­தி­யோ­கத்தர் மொஹமட் கமால் ஹுஸைன் தெரி­வித்தார்.

உயி­ரி­ழந்­த­வர்­க­ளது உடல்கள் அரு­கி­லுள்ள கரைக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன. எமது அணி­யினர் அங்கு நிற்­கின்­றனர், நாம் தொடர்ந்தும் மீட்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்றோம் எனவும் அவர் தெரி­வித்தார்.

பங்­க­ளாதேஷ் கரை­யோரக் காவல் படை­யி­னரும் கடற்­ப­டை­யி­னரும் இணைந்து மீட்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­வ­தாக கரை­யோரக் காவல் படையின் ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

நாம் 63 பேரை உயி­ருடன் மீட்­டுள்ளோம், அவர்­களுள் பெரும்­பா­லா­ன­வர்கள் ரோஹிங்­யர்­க­ளாவர் எனவும் ஊடகப் பிரிவின் அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார்.

இதுவரை 40 பேரைக் காண­வில்­லை­யெனத் தனது பெயரை வெளி­யிட விரும்­பாத அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார். இத­னி­டையே, 20 உடல்கள் மீட்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர்­களுள் பெரும்­பா­லா­ன­வர்கள் ரோஹிங்­யர்­க­ளாவர் எனவும் கரை­யோரக் காவல் படையின் தள­ப­தியை மேற்­கோள்­காட்டி உள்ளூர் தனியார் தொலைக்­காட்சி அலை­வ­ரி­சை­யான ஜமுனா ரீவி தெரி­வித்­துள்­ளது.
காணா­மல்­போ­யுள்­ளோரை தேடி­வரும் நிலையில், இறப்­புக்­களின் எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­க­லா­மெ­னவும் அவர் தெரி­வித்தார்.

ஒரு மில்­லி­ய­னுக்கும் மேற்­பட்ட ரோஹிங்ய அக­திகள் தற்­போது கொக்ஸ் பஸாரில் அமைந்­துள்ள அழுக்கு நிறைந்த தற்­கா­லிக முகாம்­களில் மனி­த­வாழ்­வுக்கு பொருத்­த­மற்ற சூழலில் வாழ்ந்து வரு­கின்­றனர்.

ரோஹிங்ய மக்­களை மியன்­மாரின் ராக்கைன் மாநி­லத்­தி­லுள்ள அவர்­க­ளது சொந்த இடங்­க­ளுக்கு அமை­தி­யாகத் திருப்பி அனுப்­பு­வ­தற்கு கடந்த வருடம் மேற்­கொள்­ளப்­பட்ட பல முயற்­சிகள் தோல்­வியில் முடி­வ­டைந்­தன.

முகாம்களில் வாழ்ந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தின் விளைவாக சட்டவிரோதமாக, ஆபத்தான கடல்வழிப் பயணத்தின் மூலம் மலேசியா, இந்தோனேசியா மற்றும் ஏனைய நாடுகளுக்கு செல்ல முற்படுகின்றனர்.-Vidivelli

2 comments:

  1. யா அல்லாஹ்
    நிர்க்கதியாகி தவிக்கும் உனது அடியார்கள் யா றப்;
    அன்பு உள்ளங்களே உங்களின் துஆக்களில் இந்த மக்களுக்காக மனமுருகி பிரார்த்தியுங்கள்.

    ReplyDelete
  2. Indonesia has enough land capacity, but...?

    ReplyDelete

Powered by Blogger.