Header Ads



குறைந்தபட்சம் தற்போதுள்ள Mp க்களின் எண்ணிக்கையையாவது நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் - சஜித்

ஐக்கிய தேசியக் கட்சி பதவி ஆசைகளால் பிளவுபடாது என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சூளுரைத்துள்ளார்.

அவிஸாவலை பிரதேசத்திலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

தொடர்ந்துள்ள பிரச்சினைகளை மூடிமறைக்கும் வித்தியாசமான அரசியல் நாடகங்கள் தற்போதைய காலத்தில் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

எனினும் அந்த மாயையினுள் தற்போது பொது மக்களிடம் சந்தோஷமா சுகமா என கேள்வியெழுப்பினால் அதற்கு உரிய பதிலை வழங்குவார்கள்.

அதனால் பொதுத் தேர்தலின் போது வெற்றியளிக்கும் பயணமொன்றினை மேற்கொண்டு குறைந்தபட்டசம் தற்போது நாடாளுமன்றில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையையாவது நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே இலக்காகும். பதவிகள் காரணமாக நாம் பிரிவதும் இல்லை உடைவதும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.