Header Ads



ரஞ்சனுக்கு நெருக்கடி - ஐதேக யும் கைவிடுகிறது

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையில் இருந்து ரஞ்சன் ராமநாயகவை நீக்குவதும் அடுத்த கட்டமாக அவருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் ஐக்கிய தேசிய கட்சி தீர்மானம் எடுத்துள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமனாயக தொடர்புபட்ட குரல் பதிவுகள் சமூக தளங்களிலும் பிரதான ஊடகங்களிலும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து வருகின்றதை அடுத்து ரஞ்சன் ராமநாயக எம்.பி மீதான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.

செயற்குழுவில் இந்த விடயம் குறித்து விசேட கவனம் செலுத்தி அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர். 

இந்நிலையில் ரஞ்சன் ராமநாயக எம்.பியின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதும் அதன் பின்னர் அவருக்கு எதிரான கடுமையான  ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்தும் கட்சிக்குள் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் குறித்த விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்க போவதாகவும் கட்சியின் உறுப்பினர் எறான் விக்ரமரத்ன தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.