Header Ads



''எல்லாம் நன்றாக உள்ளது" - ஈரான் தாக்குதலின் பின் டிரம்பின் அறிவிப்பு

இராக்கில் அமெரிக்க விமானத்தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடந்துள்ளது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்பட உலகத்தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல்கள் குறித்து டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ''எல்லாம் நன்றாக உள்ளது. இராக்கில் இரண்டு ராணுவ தளங்கள் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து தற்போது ஆய்வு நடந்து வருகிறது. உலகில் எந்த பகுதியிலும் இதுவரை உள்ள மிக வலிமையான மற்றும் மிகவும் நவீனமான ராணுவம் நம்மிடம் உள்ளது. இந்த சம்பவம் குறித்து நாளை ஓர் அறிக்கை வெளியிடுவேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.