Header Ads



செயற்குழு தீர்மானத்திற்கு உடன்படுவதாக, சஜித் தரப்பு அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு தமது தரப்பு உடன்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். 

எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (31) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் செயலாளர் நியமனம், அந்த கூட்டணியின் கட்சித் தலைவர்களுடன் இணைந்து தீர்மானிக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி தெரிவித்தார். 

சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.