Header Ads



மாவனல்லை பதுரிய கல்லூரி மாணவனின் சாதனை

மாவனல்லை பதுரிய மத்திய கல்லூரியில் தரம் 9ல் கல்வி கற்கும் மாணவன் முஹமட் உமைர் கடந்த 27ம் திகதி மலேசியாவில் நடைபெற்ற 2019ம் ஆண்டுக்கான ஆசிய இளைஞ்சர் பளுதூக்கள்  போட்டியில் (ASIAN YOUTH JUNIOR POWERLIFITIONG CHAMPIONSHIP-2019) இலங்கை சார்பாக பங்குபற்றி வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார்.

இவர் மாவனல்லை உயன்வத்தையை சேர்ந்த நிஹ்மத்துல்லா(ராஜா) ஜெஸ்மின் தம்பதிகளின் மூத்த புதல்வராவார்.மேலும் இவர் 2019ம் ஆண்டுக்கான இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான  பளு தூக்கள் போட்டியில் 16 வயதின் கீழ் பிரிவில் பங்கு பற்றி 110kg  பளு தூக்கி சம்பியன் பட்டத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

1 comment:

  1. முஹம்மத் உமைருக்கு எமது இதயங் கனிந்த நல்வாழ்த்துக்கள். வாழ்க்கையில் மிக தூரம் செல்லவேண்டிய உமைர் மென்மேலும் பதக்கங்களையும் சாதனைகளையும் பெற்று வாழ்க்ைகயில் உயர்ந்த தரத்துக்கு வந்து தனக்கும் அவருடைய சமூகத்துக்கும் இந்த நாட்டுக்கும் பாரிய சேவையை ஆற்ற திறன்களை அடைந்து கொள்ள இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.