Header Ads



அமைச்சர் பயணித்த சொகுசு வாகனம் விபத்து, ஒருவர் மரணம்

கஹாடகஸ்திகிலிய, புத்தளம் - திருகோணமலை பிரதான வீதியின் ரத்பன்வில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

விபத்தில் பலத்தகாயமடைந்த பெண் மற்றும் அவரின் மகள் ஆகியோர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

காணி, சுற்றுச் சூழல் மற்றும் வனவிலங்கு அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன பயணித்த சொகுசு ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மற்றும் அவரது மகள் ஆகியோர் கஹாடகஸ்திகிலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

எனினும் சகிச்சை பலனிற்றி மோட்டார் சைக்கிள் செலுத்துனர் உயிரிழந்துள்ளார். 

கஹாடகஸ்திகிலிய பிரதேசத்தில் வசித்த 35 வயதுடைய சிவில் பாதுகாப்பு படை வீரரான ஜி. ரஞ்சித் குமார என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

விபத்து தொடர்பில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர் பொலிஸ் பாதுகாப்புடன் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

சம்பவம் தொடர்பில் கஹாடகஸ்திகிலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments

Powered by Blogger.