Header Ads



யாழ்ப்பாணம் கதீஜா வித்தியாலய புதிய, வகுப்பறைக் கட்டடத்தொகுதி திறந்து வைக்கப்பட்டது (படங்கள்)


புதிதாக அமைக்கப்பட்ட யாழ் கதீஜா மகா வித்தியாலய கட்டட திறப்பு விழா கல்லூரி அதிபர் ஜான்சி கபூர் அவர்களால் இன்று (15) உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 

கடந்த சில வருடங்களாக யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் உள்ளக வளாகத்தில் இப் பாடசாலை தற்காலிகமாக இயங்கி வந்தது. அதனடிப்படையில் இந்திய அரசின் நிதி உதவியில் கடந்த 2017.07.19 ஆம் திகதி குறித்த பாடசாலைக்கான கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு தற்பொழுது அதன் பணிகள் நிறைவடைந்து இன்று (15) உத்தியோக பூர்வமாக திறந்து மாணவர்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது. 

இன்றய நிகழ்வில் முதல் அம்சமாக கதீஜா மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவிகள் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி மாணவர்களால் பாண்ட் (டீயனெ) வாத்தியம் மூலம் கௌரவமாக நடை பவணியாக ஒஸ்மானியா முன்றலில் இருந்து கதீஜா மகாவித்தியாலயம் வரை அழைத்துவரப்பட்டு பாடசாலை முன்றலில் மொளலவி ஏ.எம்.ஏ அஸீஸ் மற்றும் மௌலவி முஜாஹித் ஆகியோரால் இறை பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டு, ஒஸ்மானியாக் கல்லூரி அதிபரால் வாழ்த்துரை நிகழ்த்தப்பட்டு பின்னர் அதிபரால் நினைவுக் கல் திரை நீக்கம் செய்யப்பட்டு அதிபரின் தலைமையுரையுடன் கூடிய வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து விசேட உரைகளாக யாழ் கோட்டக் கல்விப் பணிப்பாளர் மற்றும் யாழ் மாநகர முதல்வர் ஆகியோரின் உரைகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து கல்லூரி பிரதி அதிபரின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது. நிகழ்வுகளை கல்லூரி ஆசிரியை திருமதி சுபத்திரா திருசாந்த் அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

கல்லூரி அதிபர் ஜான்சி கபூர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ் வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், யாழ் - நல்லூர் கோட்டப் பணிப்பாளர்கள், யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள், யாழ் மாநகரசபை சபை முன்னாள், இன்னாள் முஸ்லிம் உறுப்பினர்கள், யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி அதிபர் ஜனாப் சேகு ராஜிது அவர்கள், ஒஸ்மானியாக் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், கதீஜா மகா வித்தியாலய ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவிகள், தற்பொழுது கல்வி பயிலும் மாணவிகள், யாழ் முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அமைப்புக்களின் பிரதிநிதிகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபைப் பிரிதிநிதிகள், உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜே 86 மற்றும் ஜே 87 கிராம சேவையாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், நலன்விரும்பிகள், விளையாட்டுக் கழகப் பிரதிநிதிகள், வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய அரசின் நிதிப் பங்களிப்பில் ஐந்து பாடசாலைகளில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் ஒரே நேரத்தில் இன்றைய தினம் திறந்து வைக்கப்ட்டிருந்தமை விசேட அம்சமாகும். 

தகவல்என்.எம். அப்துல்லாஹ் 





No comments

Powered by Blogger.