ரஞ்சன் தெரிவித்துள்ள விளக்கம்
தாம் எவ்வித முறைப்பாடுகளும் இன்றி கைதுசெய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத குரல்பதிவு இறுவட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, இன்று விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்ட அவர் செய்தியாளர்களிடம் இந்த கருத்தை வெளியிட்டார்.
தமது குரல் பதிவு தொடர்பில் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
இந்த நிலையில் எவ்வித முறைப்பாடுகளுடன் இன்றி இரண்டாவது தடவையாக தாம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ரஞ்சன் குறிப்பிட்டார்.
நீதிவான் எவரிடமும் தாம் செல்வாக்கை செலுத்தவில்லை என்றும் அவர்களே தமக்கு தொலைபேசியில் அழைத்து காவல்துறை பாதுகாப்பை கோரியதாகவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்
தம்மிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் சில குரல் பதிவுகளில் சில விடயங்கள் சேர்க்கப்பட்டு அவை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் பௌத்த தர்மத்துக்கு எதிராக தாம் செயற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Post a Comment