Header Ads



ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பிரதான, காரண கர்த்தாக்கள் யாரென அறிவிக்க வேண்டும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்கத் தவறியவர்கள், குண்டை தயாரித்தவர்கள், இதற்கான ஊக்கத்தை வழங்கியவர்கள் என அனைவரது கைகளிலும் இரத்தம் படிந்துள்ளதாகவும் அவர்கள் அனைவரையும் தண்டிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

“இவ்வேளையில், நான் ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்திடம் விசேட வேண்டுகோளொன்றை முன்வைக்கிறேன்.

இன, மத, மொழி பேதங்களைக் கடந்து, அரசியல் கட்சி பேதங்களைக் கடந்து செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறே தொடர்ச்சியாக பிளவுப்பட்டு நாம் செயற்பட்டு வந்தால், இந்த நாட்டை எவ்வாறு ஐக்கியப்படுத்துவது?

அதேபோல், ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பிரதான காரண கர்த்தாக்கள் யார் என்பதை ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஊடாக அறிவிக்க வேண்டும் என்றும் நாம் கேட்டுக்கொள்கிறோம்.

இதன் பின்னணியில் உள்ளவர்கள், குண்டை தயாரித்தவர்கள், இதற்கான ஊக்கத்தை வழங்கியவர்கள் என அனைவரது கைகளிலும் இரத்தம் படிந்துள்ளது.

அத்தோடு, இந்த சம்பவத்தை தடுத்து நிறுத்தக்கூடிய சூழ்நிலை கிடைத்தும், அதனை மேற்கொள்ளாதவர்கள் யார் யார் என்பதை கண்டறிந்து தண்டிக்க வேண்டும். எனவே, ஜனாதிபதி ஆணைக்குழு மக்களுக்கான இதன் உண்மைகள் அனைத்தையும் வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.

4 comments:

  1. Sir, if you tell to the people who has done it , how he can do the job,

    ReplyDelete
  2. ஏன் பார்தேர் கர்த்தர்மேல் சாத்தியமா உங்களுக்கு யார் சூத்திரதாரி என்று தெரியாத என்ன!

    ReplyDelete
  3. அது ஏன் பார்தேர் வெடிச்ச குண்டு எல்லாம் தமிழர் சர்ச்சில மட்டுமே வெச்சங்கோ ??

    ReplyDelete
  4. Each and everybody knows who has done the bomb blast. But what cardinal is telling is to release that fact in the media, that's all. Otherwise it's a well known secret to whole world.

    ReplyDelete

Powered by Blogger.