Header Ads



உயர்தரத்தில் சித்தியடைந்த, மாணவர்களுக்கு வட்டியற்ற கடன்

அரசு அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு கற்கை நெறியை மேற்கொள்வதற்காக வட்டி அற்ற கடனை வழங்கும் வேலைத்திட்டம் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருப்பதாக மாணவர் கடன் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

உயர் கல்வி அமைச்சுக்கு உட்பட்டதாக அங்கீகரிக்கப்பட்ட 12 உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு கற்கை நெறியை தொடர்வதற்காக மாணவர் ஒருவர் 8 இலட்சம் ரூபா வட்டி இல்லாக் கடனை இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். 

2018 ஆம் ஆண்டில் கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையில் சித்தி எய்திய அரச பல்கலைக்கழகங்களுக்கான வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் முதல் கட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியும். 

இந்த கடன் திட்டத்தின் கீழ் பிரவேசிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு இந்த கடனைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த கடனைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரிக்கப்படும். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

1 comment:

  1. மிச்சமிருந்தது அந்த அப்பாவி கபொத உயர்தர மாணவர்கள் மட்டும்தான்,அவர்களையும் பொய்மழை பெய்து மாடாக்க முயற்சி செய்யும் முயற்சி என்பதை அந்த மாணவர்கள் விளங்கிக் கொண்டால் போதும்.

    ReplyDelete

Powered by Blogger.