Header Ads



வரலாற்று சிறப்புமிக்க, பணி செய்துள்ள ரஞ்சன் - விக்டர் ஜவன்

அறிந்தோ அறியாமலோ ரஞ்சன் ராமநாயக்க வரலாற்று சிறப்புமிக்க பணி ஒன்றை செய்துள்ளதாக அரசியல் விமர்சகரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான விக்டர் ஜவன் தெரிவித்துள்ளார்.

தற்போது சர்ச்சைகளுக்கு காரணமாகியுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள பதிவுகள் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“நான் இந்த விசர்த்தனமாக வேலைகளை மிகவும் உணர்வுபூர்வமாகவும் அக்கறையுடனும் பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.

நான் சுட்டிக்காட்டிய நாட்டில் காணப்படும் அழுகிய நிலைமை மற்றும் அதன் துர்நாற்றம் என்பவற்றை ரஞ்சன் பதிவு செய்துள்ள தொலைபேசி உரையாடல்களை மூலம் இலங்கை மக்கள் புரிந்துக்கொண்டால், ரஞ்சன் அறிந்தோ அறியாமலோ வரலாற்று சிறப்புமிக்க பணியை செய்துள்ளார்.

இலங்கையில் முழு நிறுவன முறையும் அழுகி போயுள்ள நிலைமையை புரிந்துக்கொள்ள முடியும். இந்தளவுக்கு அழுகி போகும் முன்னர் இலங்கையில் படித்தவர்கள் ஏன் அறிந்துக்கொள்ளவில்லை என்பதே எனது கேள்வி என விக்டர் ஜயவன் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. விக்டர் ஐவனின் சிந்தனையை நாம் மதிக்கின்றோம்.அவருடைய சிந்தனைப் போக்கு வித்தியாசமானது மட்டுமல்ல பெரும்பாலும் நீண்ட அனுபவங்களின் பிரதிபலிப்பு. நல்லாட்சி என்ற வௌித்தோற்றம் கவர்ச்சியில் வீணாய்ப்போன அரசியல் துளுக்கன்கள் செய்த மிகவும் மோசமான அருவருக்கத்தக்க செயல்களை பொது மக்கள் சரியாக விளங்கிக் கொள்ள உள்ள மிக முக்கியமான ஆதாரம் தான் இதுபோன்ற தொடர்பாடலகள். எனவே அவற்றை முழுமையாக வௌியிட்டால் நல்லாட்சியின் வௌித்தோற்றம் எவ்வளவு கெட்டு,பாழாகிப் போயிருக்கின்றது என்பதை மக்கள் ஓரளவுக்காவது அறிந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  2. No daubt... not only Ranj... But I hope most of the politicians in the past and present authority do similarly misuse there power in politics... Only few come to power to serve our country. Most of the politicians once gained power do the same misuse of authority given to them.....

    ReplyDelete

Powered by Blogger.